மகாதிர்: நஜிப்-டிரம்ப் சந்திப்பைப் பார்த்து பெல்டா மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள்

dr mபிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்கும்   அமெரிக்க   அதிபர்   டோனல்ட்   டிரம்பும்  சந்தித்துப்   பேசியதை  ஒரு   பெரிய   சாதனை   என்று  சில  தரப்புகள்   வருணித்துள்ளன.

ஆளும்  கட்சி    அரசியல்வாதிகள்,  அவர்களின்   சந்திப்பு    1எம்டிபி    தொடர்பில்  நஜிப்மீது  சுமத்தப்பட்ட   குற்றச்சாட்டுகள்   அனைத்தும்   பொய்யானவை   என்பதைக்    காண்பிப்பதாகக்    கூறிக்கொண்டனர்.

ஆனால்,   டாக்டர்   மகாதிர்  முகம்மட்,   பிரதமர்  மேற்கொண்டது  ஒரு  “பிரச்சார  வருகை”   என்றும்   அதைக்  கண்டு   மக்கள்,  பெல்டா  குடியிருப்பாளர்கள்   உள்பட,   ஏமாந்து  விட மாட்டார்கள்   என்றார்.

“அமெரிக்கப்   பொருளாதாரத்தை  வலுப்படுத்த,  மலேசியா  அங்கு   மக்கள்  பணத்தை-  இபிஎப்  பணத்தை  முதலீடு   செய்வது   பற்றி  மட்டும்தான்   பேசப்பட்டது. எல்லாம்  நஜிப்புக்கு   ஆதரவு   திரட்டத்தான்”,  என்றாரவர்.

அது  நஜிப்புக்கு   ஒரு   வெற்றி   என்பதையோ   அதன்மூலமாக   நஜிப்மீதான     குற்றச்சாட்டுகள்     பொய்யானவை   என்று   நிரூபணமாகி    இருப்பதாகவோ  பெல்டா  குடியிருப்பாளர்கள்  ஒப்புக்கொள்ள   மாட்டார்கள். மகாதிர்  இன்று  காலை   மலேசியாகினிக்கு   வழங்கிய   நேர்காணலில்   இவ்வாறு   கூறினார்.

மகாதிர்  இப்போது,   ஆளும்  கட்சியின்  வாக்கு- வங்கிகளாகத்  திகழும்   பெல்டா  பகுதிகளில்   மலாய்   வாக்குகளை  பக்கத்தான்  ஹரபான்  பக்கம்   திருப்புவதற்குக்  கடும்  பிரச்சாரப்  பணிகளில்   ஈடுபட்டுள்ளார்.