14வது பொதுத் தேர்தல் எப்போது? நஜிப் மூச்சு விடவில்லை

najib14வது   பொதுத்    தேர்தல்   அந்த  நாளில்  நடக்கலாம்  இந்த   நாளில்   நடக்கலாம்  என்று  பல்வேறு  தேதிகள்  குறிப்பிடப்பட்டாலும்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்  அது   குறித்து   சிறு  அறிகுறிகூட    காட்டவில்லை.

மூன்று- நாள்  அமெரிக்க   வருகையின்     முடிவில்   செய்தியாளர்   ஒருவர்   நஜிப்பை   அணுகி    பொதுத்   தேர்தல்   எப்போது    என்று   கேட்டார். நஜிப்   சிரித்துக்கொண்டே  “பொறுத்திருங்கள்”   என்றார்.

“டத்தோ (ஸ்ரீ)  இன்னும்  ஓர்   ஆண்டுக்கும்  குறைவாகத்தான்  உள்ளது”,  என்று   செய்தியாளர்  கூறினார்.

அதற்கு   நஜிப்,  “ஓராண்டு  என்பது  (அரசியலில்)  நீண்ட  காலம்”,  எனப்  பதிலளித்தார்.

நஜிப்  தலைவராகவுள்ள    பிஎன்  கூட்டணியின்   ஆட்சி   செய்யும்   அதிகாரம்  2018  ஜூன்   மாதம்  முடிவுக்கு   வரும்.  அதற்கிடையில்   பொதுத்   தேர்தலை   நடத்தியாக   வேண்டும்.

-பெர்னாமா