மகாதிர்: ஹரபான் மலாய் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை மலாய்க்காரர்-அல்லாதார் உரிமைகளைப் பறிக்காது

dr mபொதுத்  தேர்தலில்   பக்கத்தான்  ஹரபான்  வெற்றிபெற்றால் மலாய்க்காரர்கள்   அவர்களின்  சிறப்புரிமைகளையும்  சலுகைகளையும்   இழப்பார்கள்    என்பதைச்  சொல்லிச்  சொல்லியே   அம்னோ,   மலாய்   ஆதரவு  பக்கத்தான்  ஹராபான்   பக்கம்  போவதைத்   தடுப்பதற்கு  முனையலாம்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,    டிஏபி   மலாய்-எதிர்ப்புக்  கட்சி   என்றும்   அதன்  ஆதிக்கம்  லேலோங்கிய   ஹரபான்   ஆட்சியில்   மலாய்க்காரர்கள்   பாதிக்கப்படுவார்கள்   என்றும்   கூறியுள்ளார்.

ஆனால்,  ஹரபான்   நிர்வாகத்  தலைவர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்,   அகூட்டணி   ஆட்சிக்கு    வருவது   குறித்து    மலாய்க்காரர்கள்    அஞ்சத்   தேவையில்லை    என்கிறார்.

“அது (பூமிபுத்ராக்களுக்கு   வழங்கப்படும்   சலுகைகள்)   தொடரும்” ,  என்றார்.

ஆனால்,  ஒன்று.

“மற்ற  இனத்தார்  நலன்களையும்   கருத்தில்   கொள்வோம்.  மலாய்க்காரர்- அல்லாதாரிடம்  இருப்பதைப்  பறித்து  மலாய்க்காரர்களை   வளப்படுத்த   மாட்டோம்”.

வியாழக்கிழமை   புத்ரா  ஜெயாவில்   மலேசியாகினிக்கு   வழங்கிய   நேர்காணலில்   மகாதிர்  இவ்வாறு   கூறினார்.