திரும்பி வந்த மாட் தயிப் அம்னோவுக்கு என்ன செய்யப்போகிறார்? தெரியவில்லை என்கிறார் நஸ்ரி

nazriஅம்னோவுக்குத்     திரும்பிவந்த   முன்னாள்  சிலாங்கூர்   மந்திரி  புசார்  முகம்மட்   முகம்மட்  தயிப்புக்குக்  கோலாகலமான   வரவேற்பு   கொடுக்கப்பட்டிருப்பது   உண்மைதான்   என்று  கூறும்  அம்னோ   உச்சமன்ற   உறுப்பினர்   நஸ்ரி  அப்துல்   அசீசுக்கு,   அவர்   அம்னோவில்   என்ன   செய்யப்போகிறார்   என்பது    உறுதியாகத்    தெரியவில்லை .

“அது  எனக்குத்   தெரியாது.  நீங்கள்   அவரிடம்தான்   கேட்க   வேண்டும்”,  என்றார்.

முன்னாள்  தலைவர்கள்   திரும்பி  வந்தாலும்   வராவிட்டாலும்   பிஎன்   அடுத்த   தேர்தலுக்கு   ஆயத்தமாகவே  உள்ளது   என்று   நஸ்ரி  கூறினார்.

“கட்சிக்குப்   பெரும்  புள்ளிகளை  அழைத்துவருவது   முக்கியமல்ல.  மக்களின்  மனத்தைக்  கவர   வேண்டும்.  அதுதான்   முக்கியம்”,  என்றார்.