அன்வார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

 

Anwarin Hospitalசிறையிலடைக்கப்பட்டிருக்கும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரது மகள் நூருல் இஸ்ஸாவும் பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரமலியும் மலேசியாகினியிடம் இதை உறுதிப்படுத்தினர்.

இன்று பிற்பகல் மணி 2.00 அளவில் நிலையற்ற இரத்த அழுத்தத்தின் காரணமாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக பிகேஆர் தொடர்புகள் இயக்குனர் ஃபஹாமி ஃபாட்ஸில் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அன்வார் தற்போது மருத்துவர்களின் கவனிப்பில் இருக்கிறார்.

தற்போது சிறைதண்டனை அனுபவித்து வரும் அன்வார் அடுத்த ஆண்டு மத்தியில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.