நோர் ஓமார் : சிலாங்கூரை மீண்டும் பிஎன் கைப்பற்ற, முன்னாள் மந்திரி பெசார்கள் மூவர் இணைகின்றனர்

நோ - அம்னோஎதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரைப் பாரிசான் மீண்டும் கைப்பற்ற அம்மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார்கள் மூவர் ஒன்றிணைந்துள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தின் அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் நோ ஓமார், முகமட் முகமட் தாயிப் அம்னோவில் இணைந்தது, மாநில பாரிசானுக்கு  ஒரு புதிய ஒளியைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“நாம் கலந்து பேசிவிட்டோம்…… தாயிப் மட்டுமல்ல, அபு ஹசான் ஓமார் மற்றும் டாக்டர் முகமட் கிர் தோயோ மூவரும், சிலாங்கூரில் பாரிசானின் வெற்றியை உறுதிபடுத்த என்னோடு இணைந்து போராட உள்ளனர்.”

“அவர்கள் (மந்திரி பெசார்) பதவியைப் பார்க்கவில்லை, முக்கியமானது என்னவென்றால், கடந்த காலங்களில் அவர்கள் செய்தவை, இன்றும் தொடர வேண்டும் …. இப்போது போலல்ல. சிலாங்கூர் மாநில அரசாங்கம் என்ன செய்திருக்கிறது?” என்று அவர் கூறினார்.

நகர்ப்புற நலன், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சருமான நோ ஓமார், கோலாலம்பூருக்கு அருகில் உள்ள டுசூன் துவா மற்றும் காஜாங் சட்டமன்றத் தொகுதிகளில், மூன்று குடியிருப்புகளைப் பார்வையிட்டப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.