தமிழ்ப்பள்ளிகளை அழிக்க DLP வழி திட்டமா! கமலநாதன் ஏஜெண்டா? ம இ கா மாநாட்டில் விசாரிக்க வேண்டும் !

DLP JR2அன்புள்ள மஇகா 71 வது பேராளர் மாநாட்டு  தலைவர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

தமிழ் அன்னையின் கருவாய் உதித்தாயே அன்றே நீ தமிழனாய் ஜெயித்தாயே! அதுதான் உண்மை!!

இங்கே 46 தமிழ்ப்பள்ளிகளுக்கு டிஎல்பி என்று கணிதத்துக்கும் அறிவியலுக்கும்  ஆங்கில ஆப்பை அடித்துவிட்டு மஇகா கமல நாரதரரும் சுப்பிரமணியரும் தமிழகம் சென்று முதல்வருக்கு மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி என்று நட்பு நாடக வரலாறு வடை சுட்டு இருக்கிறார்கள்.

தமிழ்ப்பள்ளிகளில் ஆங்கில மொழி நேரத்தை கூட்டி வாங்க வக்கில்லை. தமிழனுக்கு தமிழில் உயரிய அறிவு மதிநுட்பமிகு கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிக்க வேண்டிய அவசியமில்லை.

கடந்த 200 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளிகளின் தனித்தமிழ் தொன்மையை கெடுக்க நாட்டு இதர மொழி வெறியர்கள் போடும் சகதியில் அரசியல் குளிர்காயும் அவலம் மஇகா வரலாற்றில் ஒரு கேவலமா ன கருப்புப்புள்ளி!

இவர்கள் மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளிகள் பற்றி பெருமை பேச தகுதியற்றவர்கள். மொழி உரிமையை தரவு இழந்து அரசியல் ஆசையில் வரலாற்று பிழைக்கு வழி விட்ட இவர்களை, தமிழ் அதே அரசியல் ரூபத்தில் பழி வாங்காமல் விடாது.

மொழிதான் நம் இனத்தின் இரு கண்கள். இந்த இரு இரவல் தமிழன்களும் தமிழுக்கு இழுக்கு செய்வது கோமாளித்தனமாகும்.

மஇகா 71 வது மாநாடு வரும் 24/9 நடக்கிறது.தமிழ் பொறுப்புமிகு சத்தியவான் பேராளர்களே! இவர்கள் நடத்தும் தமிழ்மொழி துரோகத்திற்கு எதிர்ப்புக்கொடுத்து தமிழ்மொழி பாதுகாப்புக்கு உரம் சேர்க்க விழைகிறோம்.

வரும் பொதுத்தேர்தல் களம் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்மொழிக்கும் முக்கியத்துவம் தராவிடில் மஇகா வேட்பாளர்களுக்கு எதிராக சமூகம் பாடம் போதிக்கும்.

தமிழ்ப் படிக்க எழுதத் தெரியாத எந்த மஇகா வேட்பாளரையும் தமிழர் சமூகம் நிராகரிக்க வேண்டும். நீ தமிழுக்கு முக்கியம் தராததால் உன் இனத்துக்கு எவரும் மரியாதை தரப்போவதில்லை என்பதுதான் அரசியல் உண்மை!

நீ தமிழுக்கு காவல் தந்தால் உன் தலைமுறை வாழ்த்தும், இல்லையேல் உனக்கு தலைக்குனிவு.  நீ இனத்துக்கு தலைவராக இருக்க தகுதியற்றவர் பட்டியலில், பாவப்பதிவில் இடம் பொறுவாய். நீ தமிழனாய் பிறக்க உன் தாயின் தவம் மிகப்பெரியது !

உன் இந்த தவமொழிக்கு உதவுவதில்தான் உன் தாயின் பெருமை முக்தி பெறும் என்பதை உன் சிந்தைதில் பதிவு செய்வாயாக ! உன் தலைவர் சிந்திக்க சக்தி கொடு.. … உன் தமிழ் இனப் பக்தியில் சித்தி பெற பிரார்த்திக்கிறோம். வாழ்க தமிழா! நன்றி வணக்கம்.

அன்புடன்,

தமிழவன்.20/9/2017