தியாக தீபம் திலீபனுக்கு நினைவுச் சுடர் ஏற்றினார் எதிர்க்கட்சித் தலைவர்..

thileebanஇந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் எனவும்  தியாக தீபம் திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் அம்பாறை – கல்முனையில் இன்று 24  இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த போதே அவர் ‘தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது   என்றார்.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் உட்பட கட்சியின் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

-tamilcnn.lk

TAGS: