மஇகா: பிரதமர் விருப்பப்படியே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

dr subraபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  எப்படிப்பட்ட  தகுதிகளை   எதிர்பார்க்கிறோரோ  அத்தகுதிகளைக்  கொண்ட  வேட்பாளர்களையே  மஇகா  14வது  பொதுத்   தேர்தலில்   அதன்   வேட்பாளர்களாக   நிறுத்தும்.

இதனைத்   தெரிவித்த   கட்சித்   தலைவர்   டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்   வேட்பாளர்  பட்டியல்   ஒன்றை   நஜிப்பிடம்  கொடுத்திருப்பதாகக்   கூறினார்.  ஆனால்,  அது   இறுதியானது   அல்ல  தேவைப்பட்டால்   அதில்  மாற்றங்களைச்  செய்யலாம்.

எளிதாக  வெற்றிபெறக்கூடிய   வேட்பாளர்களை   அடையாளம்  காண்பது  முக்கியம்   என்று   பிரதமர்   குறிப்பிட்டதை    அவர்   சுட்டிக்காட்டினார்.

“நம்பத்தக்க    வேட்பாளர்களை    நிறுத்துவதற்கே   மஇகா  எப்போதும்   முக்கியத்துவம்   அளித்து   வந்துள்ளது.  நாங்கள்   பரிந்துரைத்துள்ள    வேட்பாளர்கள்   எல்லாருமே   நம்பத்தக்க,  வெற்றிபெறக்கூடிய    வேட்பாளர்கள்தான்”,  என்று  சுப்ரமணியம்  நேற்று   புத்ரா  உலக  வாணிக  மையத்தில்    செய்தியாளர்களிடம்    கூறினார்.