டோனி புவா: நஜிப்பின் நிஜ முகம் வெளிப்பட்டுள்ளது

1 najib unmaiநஜிப் அப்துல் ரசாக்கை, பிஎன் ஆதரவாளர்கள் “சீர்திருத்தவாதி” என்று போற்றிப் புகழ்ந்தார்கள். எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள்கூட அம்னோவில் உள்ள சுறாமீன்கள் கூட்டத்தில் அவர் சாதுப் பிராணி, ஒரு மிதவாதி,  என்றே நினைத்தார்கள்.

ஆனால், அடுத்தடுத்து வந்த இரண்டு அறிவிப்புகள் அவருடைய உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிக் கொடுத்து விட்டன என்கிறார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா டிஏபி எம்பி டோனி புவா.

முதலாவதாக, தத்தளித்துக் கொண்டிருக்கும் உத்துசான் மலேசியா கரையேற அரசுத்துறைகளும் அரசுசார்பு நிறுவனங்களும் கைகொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டது. மற்றது, “ரிம31 பில்லியன் பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்”.

உத்துசானை மீட்டெடுக்க அவர் விடுத்த கோரிக்கையானது, அச்செய்திதாளின் தீவிரவாத கொள்கைகளுடன் அவர் ஒத்துப்போகிறார்  என்பதைக் காண்பிக்கிறது.

பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டமானது நஜிப் “சீர்திருத்தவாதி” அல்ல என்பதையும் அவரது “1மலேசியக் கொள்கை”நீர்த்துப்போய் விட்டது என்பதையும் காண்பிக்கிறது.

டோனி புவா ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

TAGS: