மசீச, கெராக்கான் எம்பிகள் வெறும் ‘திண்ணை பேச்சு வீரர்கள்’

1 dapஅண்மையில் கொண்டுவரப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து வாக்களிக்காத மசீச, கெராக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் “திண்ணைப்பேச்சு வீரர்கள்” என்று டிஏபி சாடியது.

அவ்விரு கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்துக்கு வெளியில்தான் செய்தியாளர் கூட்டங்களில் எதிர்ப்புக் காட்டிப் பேசுவதிலும் அறிக்கைகள் விடுவதிலும் துணிச்சலைக் காண்பிப்பார்கள் என தைப்பிங் எம்பி இங்கா கொர் மிங் கூறினார்.

“ஆனால், நாடாளுமன்றத்துக்கு வந்ததும் ஆமாம்-சாமி போடத் தொடங்கி விடுவார்கள்”, என்றாரவர்.