மகாதிர்: கடமை தவறிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

1 maha2012ஆம் ஆண்டு தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை,  அரசாங்கத்தின் திறமைக்குறைவையும்  நிர்வாகச் சீர்கேடுகளையும்  அம்பலப்படுத்தி இருப்பதால்  சம்பந்தப்பட்ட  அமைச்சர்கள்  அவற்றுக்குப்  பொறுப்பேற்று  பதவி விலக வேண்டும் என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர் முகம்மட் விரும்புகிறார்.

“ஜப்பானில் விமான நிலையத்தில் ஒரு விமானம் விழுந்துவிட்டால் போக்குவரத்து அமைச்சர் பதவி  விலகுவார்.

“மலேசியாவில், (சம்பந்தப்பட்ட அமைச்சர்) அது என் பொறுப்பல்ல என்பார்….அப்படிப்பட்ட பதவி விலகல்கள் நடப்பதைக் காண விரும்புகிறேன்”, என மகாதிர் கூறினார்.

வேடிக்கையாக ஒன்றையும் குறிப்பிட்டார்.

“நானும்கூட தோற்றுப் போனேன்,  அதனால்தான் பதவி விலகினேன்”, என்றார்.

போலீஸ் படையின் கைவிலங்குகளும், துப்பாக்கிகளும், வாகனங்களும் காணமல் போய் விட்டதாம். அதற்கு பொறுப்பேற்று உள்துறை பதவி விலக வேண்டும் என்று மகாதிர் பகிரங்கமாக கூற வேண்டும்.

 

TAGS: