ஸைட் ஹுசேன் அலியிடம் உத்துசான் மன்னிப்புக் கோரியது

utusanபிகேஆரின் முன்னாள் துணைத் தலைவர் செனட்டர் ஸைட் ஹுசேன் அலி உத்துசான் மலேசியாவுக்கு எதிராகத் தொடுந்திருந்த அவதூறு வழக்கில் அம்னோவுக்கு சொந்தமான அந்த மலாய் நாளேடு அவரிடம் மன்னிப்பு கோரியது.

உத்துசான் மலேசியா தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அதனை அந்நாளிதழ் வெளியிடும் என்றும் அவர் டிவிட் செய்துள்ளார்.PKR - Syed Husin Ali

“உத்துசானும் ஸாமில் இப்ராகிமும் (ஸாமில் பிகேஆர் முன்னாள் உறுப்பினர். தற்போது கித்தா தலைவர்) தமக்கு எதிராக அவதுறு செய்துள்ளனர். ஸாமில் தனியாக கவனித்துக் கொள்ளப்படுவார்”, என்று அந்த அரசியல்வாதி கூறினார்.

ஸாமில்லும் உத்துசானும் பார்ட்டி ரக்யாட் மலேசியாவை கலைத்து விட்டு பிகேஆரில் சேர்ந்துகொள்வதற்கு ஸைட் ஹுசேன் ரிம500,000 பெற்றுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தனர்.

அந்நாளிதழுக்கும் ஸாமில்லுக்கும் எதிராக ரிம10 மில்லியன் நட்ட ஈடு கோரி ஸைட் ஹுசேன் அலி வழக்கு தொடுத்திருந்தார்.

TAGS: