நஜிப்: புரட்சி செய்ய வாங்க, பணம் தருகிறோம்

Najib - social business summitவாருங்கள், புரட்சி செய்யுங்கள் என்று பிரதமர் நஜிப் ரசாக் மலேசிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சி செய்யலாமா என்றெல்லாம் நினைப்பதற்கு வழி விடாமல், “அராப் வசந்தம்’ போன்ற புரட்சியாக இருக்ககூடாது என்று கூறி நஜிப் முந்திக் கொண்டார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற உலக சமுதாய வாணிக உச்சநிலை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நஜிப் மலேசிய இளைஞர்கள் “உலகை ஒரு சிறந்த இடமாக்குவதற்கு அமைதியான புரட்சியை” தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“பலர் நம்முடன் கை கோர்ப்பார்கள் என்று நம்புகிறேன்…ஒன்று சேர்ந்து நாம் உலகை மாற்ற முடியும்”, என்றாரவர்.

உலக சமுதாயத் தொழில் முனைவோர்களின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய நஜிப், மலேசியா சமுதாய வணிகத்திற்கு சிறப்பு நிதி வழி ஆதரவு அளிக்கிறது என்று கூறினார்.

“நிதி அமைச்சர் என்ற முறையில், நான் ரிம20 மில்லியன் அந்நிதிக்கு ஒதுக்கியுள்ளேன். பின்னர், நீங்கள் அதற்கு மனு செய்யலாம். ஆனால், உங்களின் திட்டம் மக்களில் பலரை வளம் பெறச் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்”, என்று அவர் கூறினார்.

 

 

 

TAGS: