சரவாக்கில் கால்வைக்காதே: பெர்காசாவுக்கு எச்சரிக்கை

ibrahim aliசரவாக்கில் ஒரு கிளையை அமைக்கும் பெர்காசாவின் திட்டத்துக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

சரவாக்கில் கிளை அமைக்கும் எண்ணத்தை பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி நேற்று வெளியிட்டிருந்தார். சாபா கிளை அமைந்ததை அடுத்து அவர் அவ்வாறு அறிவித்தார்.

“மாநில அரசு,  இந்தத் தீவிரவாதிகள் சரவாக் வருவதைத் தடைசெய்ய வேண்டும்”,  என்று டிஏபி சிரியான் கிளை தலைவர் எட்வர்ட் எண்ட்ரு லுவாக்  கூறினார்.

“அவர்களைக் கால்பதிக்க அனுமதிப்பது சரவாக்கில் தீவிரவாதம் செழிக்க இடமளிப்பதாகும்.  சரவாக்கியர்கள் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்”, என்றாரவர்.

வலைப்பதிவர்களும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.  ஒருவர்,  “இப்ராகிம் அலி சராவாக்கில் அடியெடுத்து வைத்தால் எல்லாரும் சேர்ந்து அவரை விரட்டி அடிப்போம்”, என்றார்.

இன்னொருவர், “இப்ராகிம்  அலியை  யாரும் இங்கு வரவேற்கவில்லை”, என்றார்.

 

TAGS: