பழனிவேல்: மெட்ரிகுலேசன் நாடகம் போதும்

 

MIC- Najibதேசிய அளவில் இந்திய சமூகத்தினருக்கு ஒதுக்கப்படும் மெட்ரிகுலேசன் படிப்பிற்கான இருக்கைகள் குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்றால் அளிக்கும் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றாது என்ற தோற்றத்திற்கு உட்பட வேண்டிய நிலை ஏற்படும்.

தகுதி பெற்ற மாணவர்களுக்கு இடம் ஒதுக்கி அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அளிக்கப்பட்ட வாய்ப்பை அனைத்து மாணவர்களும் ஏற்றுக்கொண்டு மெட்ரிக்குலேசன் படிப்பிற்கு பதிந்து கொள்ளவில்லை என்ற சாக்குபோக்கிற்கு பின்னால் அரசாங்கம் ஒளிந்துகொள்ள முடியாது என்று மஇகா தலைவர் ஜி. பழனிவேல் இன்று கூறினார்.

“வாக்குறுதி அளிக்கப்பட்ட 1,500 மெட்ரிக்குலேசன் இருக்கைகள் அனைத்தும் நிரப்பப்படும் வரையில் இரண்டு அல்லது மூன்றாவது முறையாக வாய்ப்பை அளிக்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் நம்மை வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் என்று கருதுவார்கள்”, என்று அவர் இன்று மலாக்காவில் மஇகா ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் நஜிப்பிடம் கூறினார்.

 

 

 

 

 

 

TAGS: