சொய் லெக்: பொய்மூட்டைகளின் பாட்டி, அதுதான் பக்காத்தான்

1 chuaமசீச தலைவர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் சுவா சொய் லெக் இன்று அக்கட்சியின் பேரவையில் உரையாற்றியபோது பக்காத்தான் ரக்யாட்டைப் “பொய்களின் பாட்டி, தாத்தா” என வருணித்தார்.

“2013 பொதுத் தேர்தல் பொதுத் தேர்தல்களில் தாய்த் தேர்தல் என்றால் அதில் வங்காள தேசிகள் வாக்களித்ததாக பொய் சொன்னார்களே அது பொய்களுக்கெல்லாம் பாட்டி போன்றது.

“அன்வார் இப்ராகிம்(பக்காத்தான் தலைவர்) அள்ளிவிட்ட அப்பொய் மிகவும் பிரபலமாகி விட்டது. அதே வேளை, வாக்குகள் எண்ணுமிடங்களில் வேண்டுமென்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக டிஏபி  கூறியது அது சொல்லிவந்துள்ள பொய்களுக்கெல்லாம் தாத்தா போன்றதாகும்”.

பேரவையில் கொள்கையுரை ஆற்றியபோது சுவா இவ்வாறு கூறினார்.

TAGS: