ஐயோ, காப்பாற்றுங்கள் சிலாங்கூரை!

 

Tengku Adnanபிரதமர் ஆகும் முயற்சியில் தோல்வி கண்ட எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இப்போது சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு எதுவும் செய்வார் என்று அம்னோவின் தலைமைச் செயலாளரும் அமைச்சருமான உத்தமபுத்திரன் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார்.

மந்திரி புசார் ஆக வேண்டும் என்ற தமது இலட்சியத்தை அடைவதற்கு அன்வார் கட்சி உறுப்பினரும் காஜாங் சட்டமன்ற உறுப்பினருமான லீ சின் செயேயை சட்டமன்ற பதவியிருந்து விலக வைத்தார்.

“பிரதமராக முடியவில்லை என்றால், மந்திரி புசாராவது போதுமானது என்று அன்வார் நினைக்கிறார். அவருக்கு இப்பேற்பட்ட தனித்தன்மை பிரச்னை இருக்கிறது. தயவு செய்து சிலாங்கூரை அன்வாரிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று அட்னான் இன்று காலையில் புத்ராஜெயாவில் வேண்டிக் கொண்டார்.

 

TAGS: