கர்பால் மறைவு நீதித்துறைக்கும் நாட்டுக்கும் மாபெரும் இழப்பு

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஸ்ரீஅண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர், ஏப்ரல் 14, 2014.

Karpal interview with MKமலேசியாவுக்கு இன்று ஒரு கருப்பு தினம், நாடு ஒரு அஞ்சாத சிங்கத்தை இழந்து விட்டது.

மனித உரிமை மற்றும் நீதிக்கான ஓயாத போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட கர்பால்Dr-Xavier-Jeyakumar சிங்கை நாடு இழக்க நேரிட்டது அனைவருக்கும் மிக அதிர்ச்சியான, துயரமான செய்தியாகும்.

எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாட்டு மக்களின் நீதியான கோரிக்கைகளை முன்னிறுத்தி குரல் கொடுத்து வந்த கர்பால் சிங், இறுதியாக வழக்கில் வாதாட பினாங்குக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் அகால மரணம்  அடைந்திருப்பது, அவரின் வாழ்க்கையுடன் நீதிக்கான போராட்டம் பிரிக்க முடியாத ஒன்றாக கலந்து விட்டதையே காட்டுகிறது.

அவரின் பிரிவால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் கர்பால் சிங்கின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் துயரில் நாங்களும் நாட்டு மக்களும் பங்கு கொள்கிறோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

 

TAGS: