புக்கிட் குளுகோர்: ராம்கோபால் சிங் டிஎபியின் வேட்பாளர்

 

Ram Gopal - nominatedபுக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டிஎபியின் வேட்பாளராக ராம்கோபால் சிங் போட்டியிடுவார் என்பதை டிஎபி இன்று உறுதிப்படுத்தியது.

ராம்கோபால், 38, ஒரு வழக்குரைஞர். காலஞ்சென்ற கர்பால் சிங்கின் மூன்றாவது மகனாவார்.

கர்பால் சிங், டிஎபியின் முன்னாள் தேசியத் தலைவர், 2004 ஆம் ஆண்டிலிருந்து புக்கிட் குளுகோர் தொகுதியிலிருந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.

பார்ட்டி சிந்தாவின் உதவித் தலைவர் ஹுவான் செங் குவான் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களான யாக்கோப் முகமட் நூர் மற்றும் முகம்மட் நபி பக்ஸ் ஆகிய மூவரை எதிர்த்து ராம்கோபால் போட்டியிடவிருக்கிறார்.

கடந்த மே 5 பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட மசீச களம் இறங்குவதா இல்லையா என்ற முடிவற்ற நிலையில் இருந்து வருகிறது.

புக்கிட் குளுகோர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாள் மே 12. வாக்களிப்பு நாள் மே 25.

 

 

TAGS: