கைரி: அம்னோ இளைஞர்கள் சிகப்புப் பேரணியில் கலந்துகொள்ளத் தடை இல்லை

youthஅம்னோ  இளைஞர்  பகுதி  அதன்  உறுப்பினர்கள்  செப்டம்பர் 16  பேரணியில்  கலந்துகொள்வதைத்  தடுக்கவில்லை.

“பிரதமரின்  கருத்துகளை  எடுத்துரைக்க  விரும்புகிறேன். அதுவே  கட்சியின் நிலைப்பாடாகும்”, என்று அம்னோ  இளைஞர்  பகுதித்  தலைவரும்  இளைஞர்  விளையாட்டுத்  துறை  அமைச்சருமான  கைரி ஜலாலுடின்  அது பற்றி  வினவியபோது  கூறினார்.

நேற்று  அம்னோ  உச்சமன்றக்  கூட்டத்துக்குப்  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்,  அம்னோ கட்சியினர்  செப்டம்பர்  16 சிகப்புப்  பேரணியில் கலந்துகொள்ளத் தடை இல்லை  என்று கூறினார்.

“இது  சுதந்திர  நாடு. ஆனால், சட்டங்களை  மதிக்க  வேண்டும். சட்டத்துக்கு  மேலானவர்கள் யாருமில்லை.  அம்னோ  உறுப்பினர்களுக்கும்   இது  பொருந்தும்.  அவர்களும்  சட்டத்துக்கு  மேலானவர்கள்  அல்லர்”,என  நஜிப்  குறிப்பிட்டார்.