புவா: 1எம்டிபி கசிவு பற்றிப் பழிபோட நான்தான் ‘வசதியாக சிக்கிக் கொண்டேன்’

vicடிஏபி  நாடாளுமன்ற  உறுப்பினர்  டோனி  புவா,   1எம்டிபி  பற்றிய தகவலை  யுஎஸ்  நாளேடான  த  வால்  ஸ்திரிட்  ஜர்னலுக்குக்  கசியவிட்டவர்  என்று  தம்மீது  பழி  போடுவது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  ஆதரவான  வலைப்பதிவர்களுக்கு வசதியாக  இருக்கிறது  என்றார்.

தேசிய கண்காய்வுத்  துறை  தயாரித்த  இடைக்காலக்  கணக்காய்வு  அறிக்கை  பற்றி  பலரும்  அறிவர்  என  புவா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“பொதுக் கணக்குக்  குழு(பிஏசி)வில் 13 பேர்  இருக்கிறோம். என்னை  மட்டும்  குறிப்பிட்டுச்  சொல்வது  ஏன்?

“என்மீது  பழி போடுவது  வசதியாக  இருக்கிறதா?”, என  பெட்டாலிங் ஜெயா உத்தாரா  எம்பியும்  பிஏசி  உறுப்பினருமான   புவா வினவினார்.  அம்னோ  தொடர்புடைய  MyKMU.net அவர்  கணக்காய்வுத்  துறை  அறிக்கையை  WSJ-க்குக்  கசிய  விட்டிருப்பாரோ  என்று  கேள்வி  எழுப்பியிருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  புவா  இவ்வாறு  கூறினார்.