1எம்டிபி மீது வழக்குரைஞர் மன்ற அவசரக் கூட்டம்

bar cமலேசிய  வழக்குரைஞர்  மன்றம்  1எம்டிபி  விவகாரம்  பற்றி  விவாதிக்க  அவசர  பொது  கூட்டமொன்றை(இஜிஎம்)க்  கூட்டியுள்ளது.

கோலாலும்பூர்  தங்குவிடுதி  ஒன்றில்  நடைபெறும் அக்கூட்டத்துக்கு  ஆயிரத்து மேற்பட்ட  வழக்குரைஞர்கள்  வருகை  தந்துள்ளனர்.

இஜிஎமில் 1எம்டிபிமீது  அரச  விசாரணை  ஆணையம்(ஆர்சிஐ)  அமைக்க  அரசாங்கத்துக்கு  அழுத்தம்  கொடுப்பதா  அல்லது  அவ்வூழல்  பற்றிய  விசாரணைகளுக்குத்  தடையாக  இருப்பவர்கள்மீது  வழக்கு  தொடுப்பதா  என்ற  தீர்மானம்  தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞர்கள்  அதன்மீது  விவாதம்  நடத்திய  பின்னர்  தீர்மானம்  வாக்கெடுப்புக்கு  விடப்படும்.