கேஜெ: வெளிநாட்டில் கணக்கு வைத்துக்கொள்வது குற்றமல்ல

kjபலர்  தொழில்  காரணங்களுக்காக  வெளிநாட்டு  வங்கிகளில்  கணக்கு  வைத்துக்  கொண்டிருக்கலாம்  அதைக்  குற்றமென்று  சொல்ல  முடியாது  என  இளைஞர்,  விளையாட்டு   அமைச்சர்  கைரி  ஜமாலுடின்  கூறினார்.

“நிறைய  தகவல்கள்  கசிந்துள்ளன. முழுவதும்  இன்னும்   தெரியவில்லை. மெஸ்ஸியின்  பெயர்கூட  உள்ளது.

“இதனாலேயே (கணக்கு  வைத்திருப்பதால்) ஒருவர்  குற்றவாளி  ஆகிவிட  மாட்டார். தொழில்  போன்ற  காரணங்களுக்காக  பலரும்  வெளிநாட்டு  வங்கிகளில்  கணக்கு  வைத்திருக்கிறார்கள். சிலர்  அரசியலுக்கு  வருவதற்கு  முன்பே  தொழிலில்  ஈடுபட்டிருக்கக்  கூடும்”,  என கைரி  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.