1எம்டிபி மீதான பிஏசி அறிக்கை தயார்; வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும்

pua toபொதுக்  கணக்குக்குழு (பிஏசி)  1எம்டிபிமீதான  அதன்  அறிக்கையைத்  தயாரித்து  விட்டது.

அடுத்த  இரண்டு  நாள்களில்  அறிக்கை  அச்சடிக்கப்பட்டு  வியாழனன்று  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யப்படும்  என்று  பிஏசி  உறுப்பினரும்  பெட்டாலிங்   ஜெயா  உத்தாரா  எம்பி-யுமான  டோனி  புவா  கூறினார்.

ஆனால்,  1எம்டிபி  மீதான  தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கை  எப்போது  தயாராகும்  என்பதை  அவர்  குறிப்பிடவில்லை.

கேட்டதற்கு,  “அதை  அவர்களிடம்தான்  கேட்க  வேண்டும்”, என்றார்.