பிகேஆர் தலைமைச் செயலாளர் ரஃபிஸி ரமலி கைது செய்யப்பட்டார்

Rafiziarrestedஇன்று மாலை நாடாளுமன்ற கட்டடத்தின் வாயிற்கதவுக்கு வெளியில் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரஃபிஸி ரமலி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ரஃபிஸி கைது செய்யப்பட்டதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் உறுதிப்படுத்தினார். அரசு இரகசியத்தை வெளியிட்டதற்காக ரஃபிஸி அதிகாரத்துவ இரகசியச் சட்டம் (ஒஎஸ்எ) செக்சன் 8 இன் கீழ் கைது செய்யப்பட்டதாக ஐஜிபி கூறினார்.

லெம்பாகா அங்காட்தான் தெந்திராவுக்கும் 1எம்டிபிக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் இரகசியமானவை என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணத்தை பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி கடந்த மாதம் அம்பலப்படுத்தினார்.

இவ்விவகாரம் குறித்து ரஃபிஸி போஸீஸ் வாணிகக் குற்ற விசாரணை இலாகாவிடம் ஒரு வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இக்கைது குறித்து பிகேஆர் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா, “ஏன் போலீஸ் படை ரஃபிஸியை தானாகவே சரண்டையும்படி கேட்டுக்கொள்ள முடியாது என்று ஐஜிபி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்”, என்று டிவிட் செய்துள்ளார்.

ரஃபிஸி கைது செய்யப்பட்ட முறையை சிவராசா போலீசார் “கடத்தல் செய்வதற்கு” ஒப்பிட்டார்.

ரஃபிஸி ரமலின் கைதானது அவரே தேடிக் கொண்டது. அவர் இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணத்தை வெளியிட்டதற்காக igpஅதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார் ஐஜிபி காலிட் அபு பாகார்.

அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவுகள் குறித்து பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஐஜிபி காலிட் மலேசியாகினியிடம் கூறினார்.

“ஏன் போலீஸ் மீது பழி போடுகிறீர்கள்? நாங்கள் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை மட்டுமே செய்கிறோம்”, என்று காலிட் மேலும் கூறினார்.