அஸலினா: ஆதாரமில்லை அதனால் ஓஎஸ்ஏ மீறலுக்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை

azalinaஅரசாங்க  அதிகாரிகள்மீது   அதிகாரத்துவ  இரகசியச்  சட்ட(ஓஎஸ்ஏ) த்தை  மீறியதாக  இதுவரை  நடவடிக்கை  எடுக்கப்பட்டதில்லை  எனப்  பிரதமர்துறை   அமைச்சர்  அஸலினா  ஒஸ்மான்  கூறினார்.

“புகார்கள்  இருந்தாலும்கூட  எந்தவொரு  அரசாங்க  அதிகாரிக்கு  எதிராகவும்  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்பட்டதில்லை.  ஏனென்றால் (சட்டத்தை  மீறியதற்கு)  சான்றுகள்  இல்லை”, என  நாடாளுமன்றத்தில்  எழுத்துவழி  அளித்த  பதிலில்  அமைச்சர்  குறிப்பிட்டார்.

“ஆனாலும்,  பொதுச்  சேவைத்  துறையும்  அமைச்சும்  கண்காணித்துக்  கொண்டுதான்  இருக்கின்றன”, என்றாரவர்.