1எம்டிபிமீதான ஏஜி-இன் அறிக்கை இன்னமும் ஓஎஸ்ஏ-க்கு உட்பட்டதுதான் -பண்டிகார்

speaker1எம்டிபி  மீதான  தலைமைக்  கணக்காய்வாளர்(ஏஜி)  அறிக்கையை  நடப்பு  நாடாளூமன்றக்  கூட்டத்தில்  தாக்கல்  செய்யவியலாது  என  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  கூறினார் ஏனென்றால், அதற்குப்  போடப்பட்ட  இரகசிய  காப்புப்  பூட்டு  இன்னும்  அகற்றப்படவில்லை.

“அறிக்கைக்கான  இரகசிய  காப்பு  விதிகள்  இன்னும்  அகற்றப்படவில்லை  என்பதைத்  தலைமைக்  கணக்காய்வாளரே  என்னிடம்  தெரிவித்தார்”, என்றவர்  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.

பொதுக் கணக்குக்குழு  அறிக்கையுடன்  ஏஜி-இன்  அறிக்கையும்  சேர்த்து  தாக்கல்  செய்யப்பட  வேண்டும்  என்பதை  வலியுறுத்தி  ஆர்.சிவராசா (பிகேஆர்- சுபாங்)-வுக்கு  பண்டிகார்  இவ்வாறு  பதிலளித்தார்.

“இரகசியக்  காப்புக்கு  உட்பட்ட  ஓர்  ஆவணத்தை  நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்ய  அனுமதிக்க  முடியாது. அதை  அனுமதிப்பது  1972ஆன்  ஆண்டு  அதிகாரத்துவ  இரகசியச்  சட்டத்தை  மீறுவதாகும்”, என்றாரவர்.