விரைவில் வருகிறது: ரஹ்மான் vs குவான் எங் வாதம்

rahபொதுமக்கள்  முன்னிலையில்  வாதமிட   பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  தயாராக  இருப்பதை  பிஎன்  வியூகத்  தொடர்பு  இயக்குனர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  வரவேற்றார்.

அது தொடர்பாக  டிவிட்டரில்  பதிவிட்ட  அப்துல்  ரஹ்மான், “தாமான்  மங்கிஸ் (நிலம்) மீது  பொது  விவாதம்  நடப்பதை  நான்  வரவேற்கிறேன். என்  அதிகாரி  உங்கள்  தரப்பைத்  தொடர்ந்து  விவாதம்  பற்றிய  விவரங்களை  முடிவு  செய்வார்கள்”,  என்றார்.

“பினாங்கு  மக்கள்  தாமான்  மங்கிஸ்  ஊழலின்  பின்னேயுள்ள  உண்மைகளைத் தெரிந்துகொள்ள  விவாதம்  உதவும்”, என்றும் அவர்  கூறினார்.

லிம்,  அந்த  நில  விவகாரம்  பற்றி   நகர்ப்புற  நல்வாழ்வு  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சருடன்  விவாதமிட   தயார்  என்று. நேற்று  அறிவித்தார். வாதம்  தொலைக்காட்சியில்  நேரலை  செய்யப்பட  வேண்டும்  என்றும்  அவர்  விருப்பம்  தெரிவித்தார்.

“நிறைய  தகவல்  இருப்பதாக  சொல்கிறார். என்னிடம்   அவ்வளவு இல்லை.  இருந்தாலும் அவருடன் (அப்துல்  ரஹ்மான்)  விவாதம்  செய்ய  நான்  தயார்”, என்றாரவர்.