தமிழா! நீ உணரும்போது, உயிருடனாவது இருப்பாயா???

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

nathiyadra tamilan

மேகதாது அணை, பாலாற்று தடுப்பணை மத்தியரசு தலையீடாது….

உச்சநீதி மன்றம் வலியுறுத்தினாலும் கூட,

காவிரி நதிநீர் தர மத்தியரசு உத்திரவிடாது….

சந்தான கவுடா, காவிரி நீர் தர முடியாது என

மதுரையில் வந்து கூற முடியும்….

ஈழத்தில் தமிழ் பெயரில் இருக்கும் ஊர் பெயர்களை மாற்றி விட்டு

சீறி நாயக-மஹிந்த ராஜபக்சேவால் திருப்பதி வர முடியும்…..

இந்திய வரலாற்றிலே, பாகிஸ்தான் கூட

இதுவரை 10 இந்திய மீனவர்களை கூட கொன்றது கிடையாது…

ஆனால் இலங்கை இதுவரை 600க்கும் மேற்ப்பட்ட

தமிழ் மீனவனை சுட்டு கொன்றுள்ளது…

20-கூலி தமிழ் தொழிலாளிகளை ஆந்திர சந்திர பாபு நாயுடுவால்

குருவி சுடுவது போல சுட்டு கொல்ல முடியும்…

சபரிமலைக்கு சாமி கும்பிட செல்லும் தமிழனை

டீக்கடை மலையாளி நாயரால்

வெந்நீர் ஊற்றி படுகொலை செய்ய முடியும்…

ஆம் தமிழா!! நீ மட்டுமே, இந்தியாவில் நாதியற்றவன்…

இதை உரக்க சொன்ன தமிழ் தேசிய போராளிகள்

உனக்கு வேண்டாதவனாக தெரிந்தான்…

பிரிவினைவாதியாக தோன்றினான்…

உனக்கு சாதி காரனாக தோன்றினான்…

ஏன் உனக்கு மதஎதிரியாக கூட தெரிந்தான்…

நாதியற்ற அடிமை தமிழா!!!

நீ உண்மைகளை உணரும்போது…

அந்நாள் நீ உயிருடனாவது இருப்பாயா???

((குறிப்பு: இன்னும் 50 ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்கள் / தமிழ் மொழியே அழிந்து விடும்.. இது யுனெஸ்கோ நிறுவனம் 5-ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட செய்தி)) –

-Jees Suganthini Marthandam.

TAGS: