சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பிக்கள் ஆதரவு- அதிமுக தலைமையை ஏற்க நேரில் வலியுறுத்தல்

sasikalaசென்னை: சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 49 எம்பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுக தலைமையை ஏற்க வலியுறுத்தினர்.

அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வலியுறுத்தி நாள்தோறும் போயஸ்கார்டனுக்கு அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். இருந்தபோதும் அக்கட்சி தொண்டர்களால் இதை ஏற்க முடியாமல் உள்ளனர்.

இதனிடையே போயஸ் கார்டனுக்கு நேற்று அதிமுகவின் 49 எம்.பிக்களும் ஒன்றாக தம்பிதுரை தலைமையில் ஆஜராகினர். நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக திகழும் அதிமுகவுக்கு மொத்தம் 50 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் சசிகலா புஷ்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சசிகலா புஷ்பாவை தவிர 49 எம்.பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பிக்கள் பலரும், ஜெயலலிதாவைத் தொடர்ந்து சின்னம்மா சசிகலாவே அதிமுக தலைமையை ஏற்க தகுதியானவர் என தெரிவித்தனர்.

tamil.oneindia.com

TAGS: