நாடு ஆற்றல்மிகு தலைவரை இழந்து விட்டது: பிரதமர் இரங்கல்

najibசரவாக்   முதலமைச்சர்   அடினான்   சதேம்  இறப்பினால்     நாடு   திறமைமிக்க    தலைவர்   ஒருவரை   இழந்து     விட்டது   எனப்  பிரதமர்    நஜிப்     அப்துல்   ரசாக்   கூறினார்.

சரவாக்    மக்கள்   அடினானை   மிகவும்    நேசித்தார்கள்    அதனால்      அவர்களுக்கு   இது   மிகப்   பெரிய   இழப்பாகும்     என்றாரவர்.

“அவரது   நிர்வாகத்தில்   பல   மாற்றங்கள்    நிகழ்ந்துள்ளன.

“அவரின்  முடிவுகள்ம்   திட்டங்களும்     மக்கள்   அவரை   மிகவும்  நேசிக்கக்    காரணமாக    இருந்தன.   பிஎன்    அரசாங்கம்   மீதான   நம்பிக்கையும்   உச்சக்கட்டத்தை   எட்டியது. கடந்த   ஆண்டு  பிஎன்   அரசு   (சரவாக்   மாநிலத்  தேர்தலில்)   மகத்தான   வெற்றி  பெற்றது”,  என  நேற்றிரவு    நஜிப்   கூச்சிங்கில்    தெரிவித்தார்.

முன்னதாக     நஜிப்பும்    அவரின்   துணைவியார்     ரோஸ்மா   மன்சூரும்   அடினானுக்கு    இறுதி    மரியாதை    தெரிவிக்க  சந்துபோங்,  டாமாய்   ஜெயாவில்   உள்ள   அவரது   இல்லத்துக்குச்    சென்றனர்.

மிகவும்   நெருக்கமான   நண்பர்    ஒருவரை   இழந்து   விட்டதாக   நஜிப் குறிப்பிட்டார்.