அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம்.

செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால் மூடியுள்ள லொறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.

அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத பொலிஸ் தோளில் இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.

 

கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒரு அறையில் மொத்தமாக தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொடுமையின் உச்சமாக ஒரு தமிழர் உள்ளாடையோடு குவிந்திருக்கும் செருப்புகளை அள்ளிபோடுகிறார்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் எல்லாரும் உள்ளாடையோடு அரை நிர்வாணமாக கூட்டமாக புகைப்படமும், வீடியோவும் எடுப்பதற்காக அமர வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.

-http://news.lankasri.com

TAGS: