பிரதமர்: அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும், நம்புங்கள்

najibபொருளாதாரத்தை   வலுப்படுத்த    அரசாங்கம்    மேற்கொள்ளும்   முயற்சிகளின்மீது  மலேசியர்கள்   நம்பிக்கை  கொள்ள   வேண்டும்    என்று    வலியுறுத்திய   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்,   கடந்த    ஆண்டு   அந்நிய   நேரடி   முதலீடு(எப்டிஐ)   உயர்ந்ததே   இதற்குத்    தக்க     சான்று    என்றவர்   சுட்டிக்காட்டினார்.

“மலேசியப்   பொருளாதாரத்தின்மீது    வெளிநாட்டு   முதலீட்டாளர்கள்    நம்பிக்கைக்   கொள்ளும்போது   மலேசியர்கள்   நம்பிக்கைக்  கொள்ளாதிருக்க  காரணம்  ஏதேனும்   உண்டா?”,  என்று   நஜிப்   அவரது   வலைப்பதிவில்   வினவினார்.

“பொருளாதார   வலுவை    அளவிட   பல    வழிமுறைகள்   உண்டு.   எப்டிஐ   அதில்  ஒன்று. அது   ஒரு  நாட்டின்  பொருளாதாரத்தில்   அந்நிய   முதலீட்டாளர்கள்  வைத்துள்ள    நம்பிக்கையைக்  காண்பிக்கிறது”,  என்றார்.