‘அரசாங்கம் முழு விவரங்களைப் பெற முயல்வதில்லையே, பிறகு எப்படி 1எம்டிபிமீது குற்றம் சாட்டுவது?’

puaமுழு   விவரமும்     தெரியாமல்     1எம்டிபிமீது      நடவடிக்கை    எடுக்க    இயலாது      என்று   கூறியுள்ள   இரண்டாம்   நிதி  அமைச்சர்   ஜொஹாரி  அப்துல்    கனியைச்   சாடிய       பெட்டாலிங்  ஜெயா   உத்தாரா  எம்பி  டோனி   புவா,    அரசாங்கம்தான்   முழு   விவரம்    அறிய    எந்த  முயற்சியும்   செய்வதில்லையே    என்பதைச்   சுட்டிக்காட்டினார்.

“எவர்மீதும்   குற்றம்  சாட்டுமுன்   முழுக்  கதையும்   தெரிவது    அவசியம்தான். அதேவேளை   குற்றச்  செயலைப்  புலனாய்வு    செய்வதில்   ஒருமித்த   முயற்சியும்   தேவை.

“மலேசியாவில்   இன்றைய    நிலையில்    அது   இல்லை. மலேசியாவில்   நிகழ்ந்துள்ள   குற்றச்  செயல்களைப்  புலனாய்வு   செய்யும்  முயற்சி  அறவே   இல்லை   என்பது   அனைவரும்   அறிந்ததே”,  என்றவர்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

நேற்று,  ஜொஹாரி     என்ன   தவறு   நடந்தது    என்பதை  பிஏசி(பொதுக் கணக்குக்  குழு),  ஏஜி (தலைமைக்  கணக்காய்வாளர்)   ஆகியோரால்கூட   துல்லியமாகக்  குறிப்பிட   இயலவில்லை   என்று  கூறியிருந்ததாக    த  எட்ஜ்  நிதியியல்   ஏடு   அறிவித்திருந்தது   குறித்து  புவா   இவ்வாறு  கருத்துரைத்தார்.