பொருளாதாரக் கீழறுப்புச் செயல்களை நிறுத்துவீர்: நஜிப் வேண்டுகோள்

najibபொருளாதாரத்தை     அரசியலாக்குவதையும்    அதைக்   கீழறுப்புச்    செய்யும்   வேலைகளையும்  உடனே    நிறுத்த    வேண்டும்     எனப்    பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.   அதனால்   நாட்டுக்குக்   கெடுதல்தான்    உண்டாகும்     என்றார்.

“இது   தொடர்வது   நல்லதல்ல.  அரசியல்   கருத்துவேறுபாடுகள்   இருக்கலாம்.  ஆனால்,  தேசிய   நலன்களைக்   கட்சி    அரசியலில்   பணயக்  காய்களாக   வைத்து    ஆடக்  கூடாது.

“தேசிய   நலன்   எல்லாவற்றுக்கும்   மேலானது.

“பொருளாதாரக்  கீழறுப்பு   என்று   கருதப்படும்   செயல்கள்   மக்களின்   நலன்கருதி   நிறுத்திக்கொள்ளப்பட    வேண்டும்”,  என   நஜிப்   நாடாளுமன்றத்தில்   கூறினார்.