நஸ்ரி: மகாதிர் அதிகாரத்துவ பதவியில் இல்லை, அதனால் நேரலை ஒளிபரப்பு கிடையாது

debateடாக்டர்   மகாதிர்   முகம்மட்    எதிரணியில்   அதிகாரத்துவப்   பதவி    எதிலும்   இல்லை   என்பதால்   அவருடன்   தாம்    நடத்தும்   விவாதத்தை     எந்தத்   தொலைக்காட்சி    நிலையமும்   நேரலையாக  ஒளிபரப்பாது  எனச்  சுற்றுலா,   பண்பாட்டு   அமைச்சர்    முகம்மட்  நஸ்ரி   அப்துல்   அசீஸ்   கூறினார்.

வரும்   சனிக்கிழமை     கோலா   கங்சாரில்    நடைபெறுவது      அரசாங்கமும்   எதிரணியும்   சம்பந்தப்பட்ட   ஒரு  விவகாரமல்ல   என்றும்   அது   இரண்டு   தனிப்பட்டவரிடையே  நிகழும்   விவாதம்   என்றும்    அவர்   சொன்னார்.

“அவர்   எதிரணியில்   எந்தப்  பதவியும்   வகிக்கவில்லை.  எதிரணித்   தலைவர்   அல்ல.  அப்படி  இருந்தால்   எதிரணி vs அரசாங்க   விவாதமாக   அமைந்திருக்கும்.

“நானும்   அரசாங்கத்    தலைவன்   அல்ல.   ஆகவே,  இது   இரண்டு   தனிப்பட்டவருக்கிடையே     நடப்பது.    முக்கியமற்ற  இருவருக்கிடையே    நிகழ்வது   அதனால்   அரசாங்க     ஒளிபரப்புகளைப்  பயன்படுத்திக் கொள்ள  இயலாது”,என்று   நாடாளுமன்ற   வளாகத்தில்    செய்தியாளர்களிடத்தில்    கூறினார்.