பத்து ஆராங் தொழிலாளர்களின் போராட்டம் 1937, நூல் வெளியீடு

 

Batu Arang1937Bookபத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 80 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டீஷாரை அச்சுரங்கத்திலிருந்து விரட்டியடித்து அந்நகரைக் கைப்பற்றினர். நாட்டின் வரலாற்றில் பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு  முதல் சுதந்திரப் பிரகடனம் செய்தவர்கள் பத்து ஆராங் தொழிலாளர்கள்.

பத்து ஆராங்  தொழிலாளர்களின் 1937 ஆம் ஆண்டு வீரப் போராட்ட வரலாற்றை நூலாக வடித்து  மலேசிய  சோசியலிசக் கட்சி  (பிஎஸ்எம் )   எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26.3.2017) பத்து ஆராங்கில் வெளியிடுகிறது.  இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.