மலாய் ஒதுக்கு நிலத்துக்கு அம்னோ உரிமையாளராவதைத் தடுக்கும் முயற்சியில் திரெங்கானு சட்டமன்ற உறுப்பினர்

azanதிரெங்கானு   மாநிலத்தில்  மலாய்க்காரர்களுக்கென  ஒதுக்கப்பட்ட   நிலத்துக்கு   அம்மாநில    அம்னோ    உரிமையாளராவதற்கு    இடமளிக்கும்   வகையில்   மாநிலச்   சட்டங்களில்    செய்யப்பட்டுள்ள  திருத்தங்களை   எதிர்த்து    மாநிலச்  சட்டமன்ற   உறுப்பினர்    ஒருவர்    வழக்கு    தொடர்ந்துள்ளார்.

வழக்கைத்   தொடுத்துள்ள   பண்டார்    சட்டமன்றத்  தொகுதி    உறுப்பினர்    அஸான்   இஸ்மாயில்,  2015   மாநில  நிலச்   சட்டங்களின்  பிரிவு   9-க்குக்   கொண்டுவரப்பட்ட    திருத்தங்களுக்கு    திரெங்கானு   மாநில    அரசு   தகுந்த  விளக்கமளிக்கத்    தவறிவிட்டதாக      மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

“திருத்தங்களுக்கு    எதிர்ப்புத்   தெரிவித்த   ஒரே   சட்டமன்ற    உறுப்பினர்   நான்   மட்டுமே.  அதனால்தான்   வழக்கு   தொடுப்பது   என்  கடமை    என்று   நினைக்கிறேன்”,  என்றார்.