சிலாங்கூர் இரண்டு மாதச் சம்பளத்தை சிறப்பு அலவன்சாக வழங்குகிறது

 

Selangortwomonthsbonusசிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்தை ஹரி ராயா சிறப்பு அலவன்சாக ஜூன் 21 இல் அளிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி இன்று அறிவித்தார்.

மாநிலத்தின் 17,703 அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் அலவன்சின் மொத்தத் தொகை ரிம63.3 மில்லியன் ஆகும் என்றாரவர்.

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அன்பளிப்பு இது என்று அஸ்மின் தெரிவித்தார்.

இது மட்டுமல்ல. இவ்வாண்டின் இறுதியில் அரசு ஊழியர்களுக்கு இன்னுமொரு நிதி ஊக்கமளிப்பும் கொடுக்கப்படும். ஆனால், அது அரசு ஊழியர்கள் மற்றும் இலாகாகளின் செயல்திறனைப் பொறுத்திருக்கும் என்றாரவர்.