டிஎபி: மறுதேர்தல் நடத்துவது பற்றிய கடிதம் ரோஸிடமிருந்து கிடைத்தது

Letterfromrosடிஎபி அதன் மத்திய செயற்குவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக்கோரும் அதிகாரப்பூர்வமான கடிதம் ரோஸிடமிருது இன்று காலை கிடைத்ததாக அக்கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் கோபிந்த் சிங் கூறினார்.

டிஎபியின் மத்திய செயற்குழு எதிர்வரும் புதன்கிழமை கூடி இதனை விவாதிக்கும். அதன் பின்னர் ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்றாரவர்.

அதிகாரப்பூர்வமான கடிதம் அனுப்ப வேண்டும் என்று ரோஸ்க்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த போதிலும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மணி 5.00 வரையில் அக்கடிதம் வரவில்லை என்று கோபிந்த் சிங் கூறினார்.