பேரணிகளை எதிர்த்தவர் இப்போது பேரணிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்: கொள்கையற்றவர் மகாதிர் என ஜாஹிட் சாடல்

dpmடாக்டர்   மகாதிர்   முகம்மட்  பிரதமராக    இருந்தபோது    தெரு   ஆர்ப்பாட்டங்களுக்கு   இடம்கொடுக்க   மாட்டார்.  ஆனால்.
இப்போது   அவர்    “Sayangi Malaysia, Hapuskan Kleptorasi” ((மலேசியாவை   நேசிப்போம், திருட்டுத்தனத்தை   ஒழிப்போம்)  பேரணிக்கு   ஆசி  வழங்குகிறார்.

துணைப்   பிரதமர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடி  இவ்வாறு   கூறினார்.

“அவர்  பிரதமராக   இருந்தபோது,   உள்துறை   அமைச்சையும்  அவரே   வைத்திருந்தார்,   பேரணி  நடத்த   அனுமதிக்க   மாட்டார்.  இப்போது    எதிரணிக்குச்   சென்றதும்   அவரே  பேரணிக்கு    ஏற்பாடு    செய்கிறார்” .

காலமாற்றத்துக்கு   ஏற்ப   நிலைமாறும்    மகாதிர்   கொள்கையற்றவர்  என ஜாஹிட்   புத்ரா  ஜெயாவில்    செய்தியாளர்   கூட்டமொன்றில்   கூறினார்.