நஜிப்: அரசாங்கத்தைக் கவிழ்க்க 1எம்டிபி விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டது

pmஅரசியல்வாதிகள்     சிலர்      அரசாங்கத்தைக்   கவிழ்க்கும்   நோக்கத்தில்   1எம்டிபி   விவகாரத்தைப்    பெரிதுபடுத்தி    விட்டனர்.

பிரதமர்      நஜிப்     அப்துல்     ரசாக்,   இன்று,   உள்நாட்டு,  வெளிநாட்டு   முதலீட்டாளர்கள்    அடங்கிய    கூட்டமொன்றில்  உரையாற்றியபோது    இதைத்    தெரிவித்தார்.

1எம்டிபி    நிர்வாகத்தில்   சில   குறைபாடுகள்   இருந்தது   உண்மைதான்    என்று  கூறிய   அவர்   அவற்றைச்   சரிசெய்யுமாறு   தாமே   பணித்ததாகவும்    கூறினார்.

“1எம்டிபி-இல்   பிரச்னைகள்   இருந்தாலும்   அரசியல்வாதிகள்   சிலர்   அதை  ஊதிப்   பெரிதுபடுத்தி   விட்டனர்.  அவர்களின்   நோக்கம்   தேர்தல்களுக்கிடையில்   அரசாங்கத்தைக்  கவிழ்ப்பதுதான்.

“ஆக,  உண்மையில்  1எம்டிபி  ஒரு   பிரச்னை   அல்ல.  1எம்டிபி  இல்லையென்றால்    அரசாங்கத்தைச்     சட்டவிரோதமாகக்    கவிழ்க்க    வேறு   ஏதாவதொன்றைக்  கையிலெடுத்துக்  கொண்டிருப்பார்கள்”,  என  நஜிப்   அக்கூட்டத்தில்   கூறினார்.  இன்வெஸ்ட்  கேஎல் 2017   என்னும்  அந்த   முதலீட்டாளர்   மாநாட்டில்     150க்கு   மேற்பட்ட    உள்நாட்டு,  வெளிநாட்டு  நிறுவனங்களின்   900   பேராளர்கள்   கலந்து  கொண்டிருக்கிறார்கள்.