சித்தி காசிம்மை மிரட்டியவன் கைது செய்யப்பட்டான்

 

arrestedவழக்குரைஞர் சித்தி காசிம்க்கு கொலை மிரட்டல் விடுத்தவன் கைது செய்யப்பட்டான். இதை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் உறுதிப்படுத்தினார்.

“ஆம். இந்த வழக்கு சம்பந்தமாக ஒரு மலாய் ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்”, என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சந்தேகிக்கப்படும் அந்நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு மூன்று நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கு முன், தாம் எழுதியிருந்த ஒரு கட்டுரை சம்பந்தமாக தமக்கு கொலை மற்றும் பாலியல் வன்முறை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தாக சித்தி போலீஸ் புகார் ஒன்று செய்துள்ளார்.

மேலும், அவரது தலையை வெட்டப் போவதாகவும் தமக்கு மிரட்டல் விடப்பட்டதாக அவர் கூரினார்.