தேள் கொட்டியவுடன் இதை செய்திடுங்கள்: எலுமிச்சையின் அற்புதம் இதோ

limesசிட்ரிக் அமிலம், விட்டமின் C, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து ஆகியவை கொண்டுள்ள எலுமிச்சை பழம் பல்வேறு பலன்களை தரக் கூடியது.

எலுமிச்சை பழத்தை பயன்படுத்துவது எப்படி?
  • தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் தேள் கொட்டிய விஷம் உடனே இறங்கிவிடும்.
  • கடுமையான தலைவலி இருக்கும் போது, கடுங்காபியில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடனே குணமாகும்.
  • எலுமிச்சை பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு நல்ல நிவாரணம் பெறலாம்.
  • எலுமிச்சை பழமானது மயக்கம், வாந்தி, குமட்டல், கண் நோய், காது வலி போன்ற பிரச்சனையை குணமாக்க உதவுகிறது.
  • எலுமிச்சை பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால், பித்தம் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.
  • ரத்தம் கட்டு இருக்கும் இடத்தில் எலுமிச்சை சாற்றில், கற்றாழையின் உலர்ந்த பாலைக் கலந்து, அதை காய்ச்சி அடிபட்ட இடத்தில் தடவ வேண்டும்.
  • நகச்சுற்று ஏற்பட்டால் எலுமிச்சை பழத்தில் ஒரு துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.
  • எலுமிச்சை பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வறட்டு இருமல் குணமாகும். அதுவே எலுமிச்சை சாறுடன் மோர் கலந்து குடித்தால், ரத்த அழுத்தம் குறையும்.
  • பாதத்தில் ஏற்படும் எரிச்சல் குணமாக, மருதாணியை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவ வேண்டும்.
  • எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நின்று விடும்.
  • எலுமிச்சை பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படுமாரு பிடித்து வந்தால், நீர்பினிசம் குணமாகும்.

-lankasri.com