இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்: வடகொரியாவை மிரட்டிய அமெரிக்காவுக்கு சீனா அறிவுரை

chhவடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காததால், வடகொரியா மீது மீண்டும் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இதற்கு வடகொரியா இந்த புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என தெரிவித்திருந்தது.

இதனால் அமெரிக்கா பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா இராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது

இதைக் அறிந்த வடகொரியா இராணுவம்,. தற்போது அமெரிக்கா இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இந்த உலகம் இதுவரை காணாத தீயையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கும் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக சீனா கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் சூழல் மிகவும் சிக்கலானதாகவும், உணர்வுப்பூர்வமானதுமாக உள்ள நிலையில் இதில் தொடர்புடையவர்கள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

-lankasri.com