இசா சமட் பிணையில் விடுதலை

isaவிசாரணைக்காக  5-நாள்   தடுத்து   வைக்கப்பட்டிருந்த   பெல்டா   முன்னாள்   தலைவர்   முகம்மட்  இசா   அப்துல்  சமட் ,  அவரது   தடுப்புக்காவல்  காலம்   முடிவுக்கு   வந்ததை    அடுத்து   இன்று   விடுவிக்கப்பட்டார்.

அவர்  ரிம150,000   ரொக்கம் ,  சொந்த  நபர்  ஜாமின்  ரிம350,000  மேலும்  இருவரின்      உத்தரவாதத்தின்பேரில்      விடுதலையானார்.

இசா,  பெல்டா   துணை   நிறுவனம்   பெல்டா  இன்வெஸ்ட்மெண்ட்   கார்ப்பரேசன் (எப்ஐசி)   இலண்டனிலும்  கூச்சிங்கிலும்   இரண்டு    ஹாட்டல்கள்   வாங்கியது   தொடர்பான   விசாரணைக்கு    உதவியாக     தடுத்து  வைக்கப்பட்டிருந்தார்.