சீ விளையாட்டு போட்டியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது

gamesதென்கிழக்காசிய   விளையாட்டுப்   போட்டி(சீ  போட்டி)களுக்கு    ஸ்குவாஷ்   ஆட்டக்காரர்களை   ஏற்றிச்சென்ற   ஒரு   பேருந்து    விபத்துக்குள்ளானதாக   த   ஸ்டார்  செய்தி  ஒன்று   கூறியது.

பேருந்து   புத்ரா  ஜெயாவில்  உள்ள   ஒரு   தங்கு  விடுதியிலிருந்து   மியான்மார்,  பிலிப்பீன்ஸ்,  தாய்லாந்து   ஆகிய    நாட்டு   விளையாட்டாளர்களுடன்   புக்கிட்   ஜலில்  தேசிய   ஸ்குவாஷ்    மையம்  நோக்கிச்   சென்று  கொண்டிருந்தபோது   விபத்து  நிகழ்ந்தது.  அதில்   மியான்மார்   விளையாட்டாளர்களில்   சிலர்    காயமடைந்தனர்.

அதனை   அடுத்து   திங்கள்கிழமை   ஆட்டங்கள் – ஆண்கள்  இரட்டையர்   போட்டி,  பெண்கள்   இரட்டையர்  போட்டி,  கலப்பு  இரட்டையர்    போட்டி  ஆகியவை- தற்காலிகமாக   இரத்துச்   செய்யப்பட்டிருப்பதாக   அச்செய்தி   கூறிற்று.