பாஸ்: மெமாலி மீதான ஆர்சிஐ-யை வரவேற்கிறோம், அதேபோல் 1எம்டிபிக்கும் ஒன்று தேவை

ibrahimடாக்டர்    மகாதிர்    முகம்மட்     பிரதமராக     இருந்தபோது    கெடாவில்     நிகழ்ந்த    மெமாலிச்  சம்பவத்தை   விசாரிப்பதற்கு   அரச   விசாரணை   ஆணையம்   அமைக்க   அரசாங்கம்    தயாராக   இருப்பதை   பாஸ்  வரவேற்கிறது.

அதேபோன்று  1எம்டிபிக்கும்   ஒரு   ஆர்சிஐ   அமைக்கப்பட   வேண்டும்    என்று  அக்கட்சியின்   துணைத்    தலைவர்   துவான்   இப்ராகிம்    கூறினார்.

ஆழமாக   விசாரணை   நடத்தி   அனைவருக்கும்   நீதி   கிடைப்பதை    உறுதிப்படுத்த   அவ்விரு   ஆர்சிஐகளும்   தேவை    என்றாரவர்.

“1985  மெமாலிச்  சம்பவத்தை    விசாரிக்க    அரசாங்கம்   ஆர்சிஐ   அமைக்க   ஆயத்தமாக   உள்ளதை    பாஸ்   வரவேற்கிறது.

“அதே  வேளையில்    பாஸ்   2015-இலிருந்தே   1எம்டிபிமீது    ஆர்சிஐ   அமைக்கப்பட    வேண்டுமென்று   கோரிக்கை    விடுத்து    வந்துள்ளதையும்   நினைவுபடுத்த    விரும்புகிறது”,  என்று   துவான்  இப்ராகிம்  கூறினார்.