மகாதிர் ஐசியுவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது உண்மையல்ல, பெர்சத்து கூறுகிறது

 

Mnotinicuமூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் மகாதிர் புத்ரா ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மையில்லை என்று பெர்சத்து மீடியா யுனிட் இன்றிரவு ஒரு முகநூல் பதிவில் கூறுகிறது.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மகாதிர் சிலாங்கூர், பூச்சோங்கிற்கு சென்று கொண்டிருக்கையில் இச்சம்பவம் நடந்ததாக அந்தச் செய்தில் கூறப்பட்டிருந்தது.

92 வயதான மகாதிர் பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து வீழ்த்துவதற்கான கூட்டணிக்கு தலைமையேற்றிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அவர் எதிரணிக்கு ஆதரவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எதிர்வரும் வியாழக்கிழமை, கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் சீனாவின் முதலீடுகள் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மகாதிர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.